Saturday 8 December 2018

நீ வருவாய் என...

கிளைகளில் இளைப்பாறி
இலைகளின் ஊடாய்
வழிந்தோடுகிறது பனித்துளி
நூலிழையாய் பிணைந்து
நெஞ்சுக்குள் குளிரை தைக்கிறது
தெருவிளக்கின் மின்னொளியில்
தோற்றுப் போகிறது மின்மினிகள்
விடியலுடன் கூடிக் கரைய
காத்திருக்கும் பின்னிரவு
இரவு பாடல்கள் தீர்ந்த பின்னும்
முணுமுணுத்துக் கிடக்கும்
சுவத்துக் கோழி சுட்டிகள்
வைகறைப் பொழுதின்
ஏகாந்தத்தில் தனித்திருக்கிறேன்
நீ வருவாய் என....