Saturday 18 September 2010

ராணிக்கே இதுதான் கதி










ராஜஸ்தான் சரித்திரத்தில் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவிக்கு சிறப்பான ஒரு இடம் எப்போதுமே உண்டு. ‘மக்களின் மகாராணி’ என அழைக்கப்பட்டார் என கூறுவதோடு, மக்களால் அவர் மிகவும் நேசிக்கப்பட்டார் என்றே கூற வேண்டும். 1962 நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுவராஜ்யா கட்சி சார்பாக ஜெய்பூர் பாராளுமன்ற தொகுதியில் மகாராணி போட்டியிட்டார்.


அந்த தேர்தலில் பதிவான 2,46,516, வாக்குகளில் 1,92,909 வாக்குகளை பெற்று கின்னஸ் சாதனையை காயத்ரி தேவி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, 1967, 1971 ஆகிய பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற பெருமைக்கு உரியவர்.


மகாராணி காயத்ரி தேவிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் மீது வரி மோசடி வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முயற்சி செய்தால் அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.


மேற்கு வங்காளம் கூச்பிகார் ராஜா ஜிதேந்திர நாராயணனின் மகள் காயத்ரி தேவி. ஜெய்ப்பூர் மகாராஜா மான்சிங்கை 1940&ம் ஆண்டு மணந்தார். 12 வயது சிறுமியாக காயத்திரி தேவி இருந்தபோதே, அவருடைய அழகில் மான்சிங் மனதை பறி கொடுத்திருந்தார். அதனாலேயே, காத்திருந்து 3&வது மனைவியாக காயத்திரி தேவியை மான்சிங் மணந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.



உலகின் முதல் பத்து அழகிகளில் ஒருவராக ‘வோக்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டவர், மகாராணி காயத்திரி தேவி. அவருடைய ஒரே மகன் ஜகத் சிங், 1997&ம் ஆண்டு இறந்து விட்டார். பேரன் தேவராஜ், சொத்தில் பங்கு பெறுவதற்காக கோர்ட்டுகளில் பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கிறார்.


மகாராஜா மான்சிங்கின் மூன்றாவது மனைவியாக காயத்திரி தேவி இருந்தார் அல்லவா? ஏற்கனவே, மகாராஜா மணந்து கொண்ட இரண்டு மூத்த தாரங்களின் மூலமாக பிரித்விராஜ் சிங், ஜெய்சிங் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வளவும் இருந்து என்ன பயன்?


ராஜஸ்தான் ராஜ குடும்ப வழக்கப்படி, மகாராஜாவோ அல்லது மகாராணியோ இறந்து விட்டால், அவர்களை எரியூட்டிய இடத்தில் ‘சத்ரி’ என்ற பெயரில் நினைவிடம் கட்டுவார்கள். அதுபோல மகாராஜா மான்சிங் மற்றும் அவருடைய முதல் இரண்டு மனைவிகளான மருதார் அன்வர், கிஷோர் அன்வர் ஆகியோர்க்கு ‘சத்ரி’ கட்டப்பட்டுள்ளன.


ஆனால், தன்னுடைய 90&வது வயதில் மரணமடைந்த மகாராணி காயத்திரி தேவிக்கோ, அவர் மறைந்து ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ராஜ குடும்ப வாரிசுகள் யாருக்கும் அவருக்கு நினைவிடம் கட்டக் கூட நேரமில்லை. ராஜ குடும்ப சொத்துகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்களே தவிர, தங்களுடைய கடமையை செய்ய யாருமே தயாராக இல்லை.


ராஜபுத்திர வழக்கப்படி ராஜ குடும்பத்தினரின் மறைந்த தினத்தன்று அவர்களுடைய நினைவாக, அவர்களுடைய நினைவிடத்துக்கு மக்கள் வந்து விளக்கேற்றி வைப்பார்கள்.


உலகப் பேரழகியாகவும், மக்களின் உள்ளம் கவர்ந்த ஜெய்ப்பூர் மகாராணியாகவும் கின்னஸ் சாதனை புரியும் வகையில் மக்களின் பேராதரவை பெற்ற தலைவியாகவும் வலம் வந்த மகாராணி காயத்திரி தேவிக்கு நினைவிடம் கட்டக்கூட யாருமே இல்லை என்றால், இதை என்னவென்று சொல்லுவது?


இவவளவு சிறப்பு வாய்ந்த ஜெய்ப்பூர் மகாராணிக்கே இது தான் கதி.


றேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் உருவாகி இருக்கும் நமது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தன்னிலை மறந்து ஆடும் சாதாரண மனிதர்களும் இதில் இருந்து பாடம் படித்தால் நல்லது.

-நன்றி ‘தினமணி’

= வை.ரவீந்திரன் 

Tuesday 14 September 2010

பேராசைப் பெருந்தகையே போற்றி


அண்ணாவின் கவிதை
-----------------------------
பேராசைப் பெருந்தகையே போற்றி
பேசநா இரண்டுடையாய் போற்றி
தந்திர மூர்த்தி போற்றி
தாசர்தம் தலைவர் போற்றி
வஞ்சக வேந்தே போற்றி
வன்கண நாதா போற்றி
கொடுமைக் குணாளா போற்றி
கோழையே போற்றி
பயங்கொள்ளிப் பரமா போற்றி
படுமோசம் புரிவாய் போற்றி
சிண்டுமுடித் திடுவாய் போற்றி
சிரித்திடு நரியே போற்றி
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி
உயர் அநீதி உணர்வோய் போற்றி
எமது இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லாக் கேடே போற்றி
இரை இதோ போற்றி! போற்றி
எத்தினேன் போற்றி போற்றி
- இந்தக் கவிதை, 1945 ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது.

சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த கவிதையில் அண்ணாவின் துணிச்சல், தெளிவு, கருத்துச் செறிவு தெளிவாகத் தெரிகிறது. மனித மேம்பாடு பேணப்படுவதற்கான போராட்டமே தனது இயக்கம் என்றும் அந்த போராட்டத்தை புனிதப் போர் என்றும் அறிவித்த அண்ணா, இத்தகைய கவிதையை எழுதியிருக்கிறார்.
குறிப்பு:- யாருக்கோ அண்ணா எழுதிய இந்தக் கவிதை, 65 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவருடைய சீடருக்கு பொருத்தமாக இருப்பது மிகவும் விந்தையாக உள்ளது.

= வை.ரவீந்திரன்

கோவிந்த ராஜன் கமிட்டி & தமிழக அரசின் குள்ள நரித்தனம்



தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவோடும் (!), பாராட்டுகளுடனும் (!) பீடு நடை போட்டு வரும் தமிழக அரசின் புதிய முயற்சி, கோவிந்தராஜன் கமிட்டி.
அதாவது, தமிழகம் முழுவதும் புற்றீசல் போல முளைத்துள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காகவும் அப்பாவி பெற்றோர்களை பாதுகாக்கவும் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக அந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியும் மிக தீவிரமாக பரிசீலனை செய்து ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்புக்கும் எந்த அளவுக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அரசுக்கு அளித்தது.
அந்த அறிக்கையை வெளியிடுவதிலேயே அரசின் குயுக்தி வெளியாகி விட்டது. அறிக்கையின் முழு விபரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது போல அரசு செய்யவில்லை. ஒவ்வொரு பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் கட்டண விபரங்களை ஒட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கவில்லை. மாறாக, கோவிந்தராஜன் கமிட்டியிலேயே மேல்முறையீடு செய்வதற்கு தனியார் பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் தவறு ஏதும் கிடையாது. ஏனென்றால், பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தனியார் பள்ளிகளுக்கு நிவாரணம் அளிப்பது சரியே.
அதைத் தொடர்ந்து, 6 ஆயிரம் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. தமிழகத்தில் மொத்தம் 8 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மேல் முறையீட்டை விசாரித்த கோவிந்தராஜன் கமிட்டி, ‘இந்த ஆண்டு நாங்கள் நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். மேல் முறையீட்டு மனுக்களை பரிசீலித்து, அது தொடர்பான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த பணிகள் முடிந்தபிறகு நிர்ணயிக்கப்படும் புதிய கட்டணத்தை அடுத்த கல்லி ஆண்டு (2011&12) வசூலிக்கலாம்’ என்று கூறியது.
இங்கு தான், தமிழக அரசின் குள்ளநரித்தனம் வெளிப்படுகிறது. அதாவது, தேர்தல் ஆண்டான இந்த ஆண்டில் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்து விட்டால் பெற்றோரான பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். அதனால், வித்தியாசமானதொரு முடிவை அறிவித்து விட்டது. சரி. இத்துடன் பிரச்சினை முடிந்து விட்டதா? என்றால் அது தான் இல்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முன்பு பெற்றோர்கள் திரண்டு, அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னை முதல் பல்வேறு நகரங்களிலும் இது நடைபெறுகிறது.
கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையில் தமிழக அரசு உறுதியாக இருந்தால், அதை கண்டிப்பாக பின்பற்றுமாறு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு உத்தரவிடலாமே? அதை ஏன் செய்யவில்லை. தலைநகர் சென்னையில் சில மேல்தட்டு பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்ப்பதற்கே ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியாமல் நடைபெறுகிறதா? 11&ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட முதல் பாடப்பிரிவில் படிப்பதற்கு சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஒரு பருவத்துக்கு ரூ.75 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்துக்கு அந்த பள்ளிகள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா? நல்ல பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக பாடம் சொல்லித் தரப்படுகிறது. சிறந்த வகுப்பறை, மின் விசிறி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி இப்படி பல்வேறு வசதிகள் செய்து தரப்படுவதாகவும் கூறுகின்றன. இவை உண்மையாகவே இருக்கலாம். அரசு பள்ளிகளை விட, சற்று தரமானதாக இருப்பதால் தானே ரூ.75 ஆயிரம் கொடுத்து பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் அளிக்கும் நிலையில், இத்தகைய மேல்தட்டு பள்ளி ஆசிரியர்களுக்கும் அதற்கு நிகராகவே சம்பளம் அளிக்கப்படுகின்றன. இத்தகைய பள்ளிகளில் பணி புரியும் பல ஆசிரியர்கள், அரசு வேலைக்கு செல்ல விரும்பவதில்லை என்பதும் கூடுதல் தகவல்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப்பட்ட பள்ளிகளை கோவிந்தராஜன் கமிட்டி கட்டுப்படுத்துகிறதா? என்பதே எனது கேள்வி. ஏனெனில், கமிட்டியின் பரிந்துரையை அமல் படுத்த உத்தரவிடும் ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளோரின் வாரிசுகளே இந்த பள்ளிகளில் தானே படிக்கின்றனர். விரல் விட்டு எண்ணும் அளவில் உள்ள இந்த பள்ளிகளை விட்டு விட்டு, மற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகள் தான் இப்போது படாதபாடு படுகின்றன. கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்றால் ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘கை வைக்க’ நேரிடும். (பல பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான இன்கிரிமெண்ட் போடப்படவில்லை என்பது கூடுதல் தகவல்). அதே நேரத்தில், கட்டணத்தை வசூலிக்கும்போது பெற்றோரின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த இடத்தில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் என்ற இரண்டு ஆடுகளை மோதவிட்டு ரத்தம் குடிக்க காத்திருக்கும் குள்ள நரித்தனம் தான் தமிழக அரசின் திட்டமாக இருக்கிறது. இல்லாவிட்டால், ஏதாவது ஒரு நிலையில் உறுதியாக இருந்திருக்குமே? முன்பே, நான் குறிப்பிட்டது போல கோவிந்த ராஜன் கமிட்டி பரிந்துரைகளில் உறுதியாக இருந்தால், அதை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடலாமே? அதை விட்டு விட்டு, பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையே மோத விட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழக அரசின் இத்தகைய செயல்களால், பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தான் படிக்கும் பள்ளிக் கூடத்தின் முன்னால், தன்னுடைய அம்மாவோ அப்பாவோ போராட்டம் நடத்துவதை பார்க்கும் ஒரு மாணவன், தனது பள்ளியைப் பற்றி என்ன நினைப்பான்? தனது ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பற்றிய அவனது மதிப்பீடு என்னவாக இருக்கும்?
இத்தகைய நிலையில் படித்து வளரும் அந்த எதிர்காலத் தலைமுறை எப்படி இருக்கும்? மாதா, பிதா, குரு, தெய்வம் & என தெய்வத்துக்கு ஒரு படி மேலாக வைத்து போற்றப்படும் ஆசிரியர்களை இந்த மாணவத் தலைமுறை போற்றிப் பாராட்டுமா?
அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஏராளமாக சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு, சுமார் 8 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் (சராசரியாக ஒரு பள்ளிக்கு 50 பேர் என்றால் கூட, 4 லட்சம் பேர்) நிலைமையை யோசித்து பார்க்கிறதா? அந்த ஆசிரியர்களுக்கென குறைந்தபட்ச ஊதியம் எதையாவது கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்து இருக்கிறதா? கட்டணத்தோடு, அது பற்றியும் பரிசீலித்து முடிவு எடுப்பது அவசியம்.
தனியார் பள்ளிகள் அனைத்தும் கட்டணக் கொள்ளை அடிப்பதாக கருதினால், அதற்கு கடிவாளம் போடும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றலாம். அல்லது, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களைப் போல, அரசு பள்ளி ஆசிரியர்களையும் கடுமைமயாக வேலை வாங்கினால் தானாகவே அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் பள்ளிகளின் வியாபாரம் பிசு பிசுத்துப் போகும்.
தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு பள்ளிகள் இல்லை என்றால், அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்கி விடலாமே? இலவச கலர் டி.வி. ஒரு ரூபாய் அரிசி போன்றவற்றுக்கு பதிலாக கல்விக்கு செலவிடலாமே? கலர் டி.வி.யை யார் கேட்டது? தனியார் பள்ளிகளை அரசுடையாக்கும் செலவுக்காக அரிசியின் விலையை ரூ.3 வரை உயர்த்தலாமே-? ‘அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதை விட, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே புண்ணியம் யாவிலும் சிறந்தது’ என்பது நம்முடைய முன்னோர் வாக்கு.
இதை எல்லாம் விட்டு விட்டு, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக பெற்றோரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கட்டண நிர்ணயம் என்ற நாடகத்தை நடத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பெற்றோரையும் & தனியார் பள்ளி நிர்வாகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் குள்ள நரித்தனத்தை எந்த காரணத்தை கொண்டும் நியாயப்படுத்த முடியாது. பள்ளிக் கல்வியில் அரசியல் விளையாட்டை காண்பிப்பது, எதிர்கால சமூகத்தையே அரித்து விடும். குளறுபடியான பள்ளிக் கல்வியால் எதிர்காலத்தில் குழப்பமான சமுதாயம் உருவாகும்.

= வை.ரவீந்திரன் 

Monday 13 September 2010

காஷ்மீருக்கு ஒரு நீதி, ஈழத்துக்கு ஒரு நீதியா?




இந்தியாவின் தலை பகுதி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இன்று நேற்றல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக. ஆனால் கடந்த சில மாதங்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். காஷ்மீர் பற்றி தான் சொல்லுகிறேன். இந்தியாவின் பிரஸ்டீஜ் போன்று கருதப்படும் காச்மீருக்காக மத்திய அரசு கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அரசியல் சட்டத்தில் 370 வது பிரிவு காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கிறது. இதன் மூலமாக, காஷ்மீருக்குள் இந்தியாவை சேர்ந்த வேறு யாரும் கை அகல நிலம் கூட வாங்க முடியாது. இது மட்டும் அல்ல. தேவையான அளவுக்கு தாரளமாக மத்திய அரசின் நிதி வேறு வாரி வழங்க படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போதைய மன்மோகன் சிங் அரசு சில லூசுத்தனமான முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறது.
அதாவது, கலவர பூமியான காஸ்மீரில் இருக்கும் ராணுவத்துக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்கள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சில மாவட்டங்களில் ரத்தும் செய்யப்பட்டு விட்டது. இது தவிர, காஸ்மீருக்கு சுயாட்சி அளிக்கவும் பரிசீலனை நடைபெறுகிறது. இது போன்ற கோரிக்கைகளை எல்லாம் முன் வைப்பவர் யார் தெரியுமா? காஸ்மீரில் ஆட்சி செய்யும் அனுபவமே இல்லாத சின்ன பயன் முதல்-மந்திரி உமர் அப்துல்லா.
தமிழ் நாட்டை போலவே, தந்தை-மகன்-பேரன் என்று காஸ்மீரிலும் தொடருகிறது, பரம்பரை அரசியல்.
ந்த சின்ன பயன் கோரிக்கையை மன்மோகன் சிங்கும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். என்ன வெட்கக் கேடு. அதற்கு ஆமாம் சாமி போடுவது, நம்ம ஊரு சீமான் வீட்டு செல்ல பிள்ளை (உபயம் கருணாநிதி) ப. சிதம்பரம். ராணுவ மந்திரி அந்தோணி, நிதி மந்திரி பிரணாப் ஆகியோர் எதிர்த்தும் இத்தகைய கேடுகெட்ட முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
இந்த இடத்தில, காஸ்மீரில் உள்ள பிரிவினை தலைவர்கள் குறிக்கோள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். 'நம்முடைய போராட்டங்கள் எந்த வடிவில் இருந்தாலும் சரி. நேரத்துக்கு ஏற்ப போராட்டங்கள் மாறலாம். அனால். நமது குறிக்கோள் ஒன்றே. சுதந்திர காஸ்மீர் மட்டுமே நமது லட்சியம்' - என்பது பிரிவின தலைவர்களின் முழக்கம். தற்போதைய போராட்டம், கல் வீச்சு.
தன்னுடைய கொடிய நோய்க்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்து விட்டு காஷ்மீர் சென்றதும் நடந்த வரவேற்பு கூட்டத்தில் பேசிய கிலானி என்ற பிரிவினைவாத தலைவர், 'காஸ்மீரை சட்ட விரோதமாக இந்திய ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. எனவே, இந்திய மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என முழக்கமிட்டார்.இது போன்ற கொள்கை பிடிப்பு கொண்ட தலைவர்களின் உறுதி மொழியை ஏற்று இரண்டு நாட்களுக்கு முன்னால் ரம்ஜான் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்தார், சின்ன பையன் உமர். இதுதான் சமயம் என்று, ஆயிரக்கணக்கான பிரிவினைவாத இளைஞர்கள் ஒன்று திரண்டு வன்முறை-இல் இறங்கி விட்டனர். அரசின் ஆசிர்வாதத்தோடு பிரிவினைவாதிகள் ஒன்று கூடி விட்டனர்.
இது போன்ற முன் யோசனை இல்லாத முட்டாள் தனமான முதல் மந்திரி மற்றும் பொறுப்பற்ற பிரதமரை எங்கேயாவது பார்க்க முடியுமா? இந்த கும்பல் காஸ்மீர் பிரச்சினையை தீர்க்க போகிறதாம்?
சரி, காஸ்மீர் பிரச்சினை எக்கேடு கேட்டும் போகட்டும். அது பற்றி விளக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தகவல்களும். இப்போ விசயத்துக்கு வருவோம்.
இப்போது காஷ்மீர் போராட்டத்தை தனி ஈழ போராட்டமாகவும், இந்தியாவை இலங்கையாகவும் ஒப்பிட்டு பார்க்கலாம். இதை மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசே ஒப்பிட்டுக் கொண்டது. இலங்கையில் கடந்த ஆண்டு யுத்தம் நடந்தபோது, 'காஸ்மீர் கலவரத்தை ஒடுக்கும் நாம், தனி ஈழத்தை எப்படி ஆதரிக்க முடியும்' என கேட்டவர்கல் தான் இந்த காங்கிரசார். மன்மோகன், சிதம்பரம் போன்றவர்கள் இப்படி தான் கூறிக் கொண்டார்கள்.
சரி.
அவர்கள் வாதப்படி வைத்துக்கொண்டால் இப்போது ராணுவத்தை முற்றிலுமாக இறக்கி காஸ்மீரில் முழு தாக்குதலை நடத்த வேண்டியது தானே? இலங்கை-இல் தமிழர்களை முற்றிலுமாக ஒழிக்க இந்திய உதவி செய்தது அல்லவா? அது போல, காஸ்மீரிலும் முழு அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா, இங்கிலாந்து இப்படி உதவிகள் கேட்கலாமே, ராஜா பக்சே போல. மேலும், பொன்சேகா போல ஒரு தளபதியை நியமித்து முழு வீச்சில் தாக்குதல் நடத்தி காஸ்மீரை சுடுகாடக்கலாம்.
அரசியல் ரீதியாக, இதற்கும் கருணாநிதி ஆதரவு தருவார். வேண்டுமானால், அந்த தாக்குதலை சர்வதேச அளவில் மூடி மறைக்க தேவையான ஆலோசனைகளும் தருவார். ராஜா பக்சே விடமும் கூடுதல் அறிவுரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதை விட்டு விட்டு, 370 வது சட்டப் பிரிவு, சுயாட்சி, ராணுவத்துக்கு அதிகாரத்தை விலக்குவது என்று சிறு பிள்ளை தனமாக செய்வது ஏன்? இலங்கை தமிழனுக்கு ஒரு நியாயம். காச்மீரிக்கு ஒரு நியாமமா? இது போன்ற தீர்வுகளை அப்போது இலங்கை அரசிடம் ஏன் கூறவில்லை. மாறாக, ஆயுதமும் ஆட்களும் அனுப்பி போரை முன் நின்று நடத்தியது ஏன்?
சண்டை முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கூட, இன்னமும் ஈழத்தில் நெருக்கடி நிலை நீடிக்கிறதே? ஆனால், காஸ்மீரில் வெட்டு குத்து நடக்கும் போதே ராணுவத்துக்கு அதிகாரத்தை குறைக்கும் யோசனை முன் வைக்கப் படுகிறதே?
இலங்கையில், தமிழர் பகுதிகளில் மீண்டும் தனி நாடு போராட்டம் எழுந்து விடக்கூடாது என்பதற்காக சிங்களர்கள் குடி அமர்த்தப்பட்டு வருகின்றனர். ராஜ பக்சே செய்யும் இந்த முடிவை ஆதரித்து, அங்கு புனரைமைப்பு பணிகளுக்கு கோடிகளை கொட்டும் இந்திய அரசு, காஸ்மீரிலும் மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்களை குடி அமர்த்தலாமே?அனால், அங்கிருந்து விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்கு கூட, ஆதரவு அளிக்கவில்லையே ஏன்? ராஜா பக்செவுக்கு இருக்கும் துணிச்சல், தெனாவட்டு மிகப் பெரிய நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவுக்கும் அதை ஆளும் மன்மோகனுக்கும் இல்லையே? தமிழன் என்று கூறிக்கொள்ளும் சிடம்பரத்துக்கும் இல்லையே?
அப்போது தனி ஈழ போராட்டத்தை கடுமையாக எதிர்த்த சிதம்பரம், இப்போது வேறு மாதிரி வேஷம் போடுவது ஏன்?கஷ்மீர் பிரச்சினை என்றால் ஒரு நீதி! ஈழம் என்றால் தமிழன் என்றால் ஒரு நீதியா?


= வை.ரவீந்திரன் 

Sunday 12 September 2010

எனது மூத்த மகன்


* உன் பார்வை
முதன் முதலில்
என் பக்கம்
திரும்பியபோது
பனி பூக்களை
தூவிய பரவசம்

* தாயின் கருவறைக்கு
விடை கொடுத்து
நீ
பூமியை தொட்டு
பார்த்த அந்த
கணப் பொழுதில்
உணர்வுகளின்
உரசலை தாண்டி
காதலின்
அர்த்தங்களை - நாங்கள்
பூரணமாக
புரிந்து கொண்டோம் 

= வை.ரவீந்திரன்