Wednesday 24 July 2019

கண்களுக்கு நிகரானவை கைகள்...

அது ஒரு ஃபைன் ஈவினிங்.

இப்பிடி சொல்லத்தான் ஆசை. ஆனால், அது ஒரு மோசமான பின் அந்தி கருக்கல் பொழுது என்பதே உண்மை. 

இரவுப் பணிக்காக புறப்பட்டபோது அந்த கருக்கலின் கோர காத்திருப்பை நான் அறியவில்லை. நேரு ஸ்டேடியம் பக்கத்தில் பைக்கில் பயணித்தபோது குறுக்காக பாய்ந்த ஆட்டோ ஒன்று, என்னுடைய அடுத்த மூன்று வார காலத்தை எடுத்துச் செல்லப்போவதை  நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பைக்கின் வலது பக்கம், ஆட்டோவின் பின் பகுதியில் மோத, இதை முன் கூட்டிய அவதானித்ததால் ஒரு பக்கமாக சரிந்த எனது வலது கையில் செம்ம வலி. எழுந்து பார்த்தால், சென்னை ஆட்டோவுக்கே உரித்தான கொள்கைப்படி அந்த ஆட்டோ எஸ்கேப். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் அப்போது இல்லாததால் கையில் வலியோடு இரவுப் பணியில் ஆஜர்.

அடுத்தடுத்த நான்கு நாட்கள் அலுவலகம் போன போது, கையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலி குறையாததால் எக்ஸ் ரே எடுத்து பார்த்தால் வலது உள்ளங்கையில் விரலின் கீழ் பகுதியில் எலும்பு முறிவு. 'கண்களுக்கு நிகரானது கைகள். அதை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. மருத்துவமனையின் இந்த வாசகங்கள், அடுத்தடுத்த நாட்களில் அனுபவப்படுத்தின.


வலது உள்ளங்கையில் முழுமையாக கட்டு போட்டதோடு முறிந்த எலும்பு மீண்டும் ஒன்று சேர மூன்று வாரங்களாகும். கட்டிலும் தண்ணீர் படக் கூடாது என்ற அறிவுரை பிளஸ் மாத்திரைகளை தந்து அனுப்பினார், ஆர்த்தோ டாக்டர்.

அந்த மூன்று வாரங்கள் மிக கொடுமையானவை. வேலை இல்லாதவனின் பகல் பொழுதுகள் மிக நீளமானவை என்ற வார்த்தைகளின் பொருள் அறிந்த தருணங்கள் அவை. வீட்டில் எல்லோரும் பள்ளிக்கூடம் சென்ற பிறகு, படிக்கட்டுகளில் வழிந்தோடும் வெயிலும், அதை துரத்தி துரத்தி பிடிக்கும் பாதாம் மரத்தின் இலைகளுமே துணை. அவ்வப்போது அணிலும், பூனைகளும், பாதாம் பழத்தை ருசிக்க வரும் பசுக்களும் நலம் விசாரித்துச் செனறன.

வைரமுத்து சிறுகதைகள், வேல.ராமமூர்த்தி சிறுகதைகள், பதின் அப்புறம் தேசாந்திரி துணையெழுத்து, பொன்னியின் செல்வன் புத்தகங்களின் மறுவாசிப்பு... இப்படியாக வாரங்கள் கழிய, இதோ மற்றொரு எக்ஸ் ரேக்கு பிறகு கட்டு அவிழ்த்தாகி விட்டது.



வீட்டுச் சிறையில் இருந்து எனக்கு விடுதலை. மாவு கூண்டுக்குள் இருந்து வலது கைக்கு விடுதலை. ஒரு வழியாக மீண்டும் வழக்கமான பணிகள். விரல்களும் கைகளும் கண்களை போல எவ்வளவு முக்கியம் என்பதை இந்த விபத்தால் உணர்ந்தேன். எனது தொழிலுக்கும் அவைதான் மூலதனம்.

சாலைப் பயணம் செல்லும் முன் எனது அனுபவத்தை ஒரு படிப்பினையாக்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே. பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் மிகக் கவனமாகவே செல்லுங்கள். நமக்கோ, நம்மாலோ ஆபத்து நேரிடாமல் கவனம் காப்போம்.

சிறிய சாலை விபத்துகள் கூட, பெரிய அளவில் உடல், மன வருத்தங்களை தரும், நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும். விரலின் வீரியத்தால் விளைந்த  முன்று வார வேதனை கூறுகிறது, 

"போக்குவரத்து விதிகள் என்பது சட்டமல்ல. வாழ்வியல் வழிமுறைகளின் அங்கம்".

#நெல்லை_ரவீந்திரன்

போக்குவரத்து... விதிகளை மதிப்போம்...

 அது ஒரு ஃபைன் ஈவினிங்.

இப்பிடி சொல்லத்தான் ஆசை. ஆனால், அது ஒரு மோசமான பின் அந்தி கருக்கல் பொழுது என்பதே உண்மை. 

இரவுப் பணிக்காக புறப்பட்டபோது அந்த கருக்கலின் கோர காத்திருப்பை நான் அறியவில்லை. நேரு ஸ்டேடியம் பக்கத்தில் பைக்கில் பயணித்தபோது குறுக்காக பாய்ந்த ஆட்டோ ஒன்று, என்னுடைய அடுத்த மூன்று வார காலத்தை எடுத்துச் செல்லப்போவதை  நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பைக்கின் வலது பக்கம், ஆட்டோவின் பின் பகுதியில் மோத, இதை முன் கூட்டிய அவதானித்ததால் ஒரு பக்கமாக சரிந்த எனது வலது கையில் செம்ம வலி. எழுந்து பார்த்தால், சென்னை ஆட்டோவுக்கே உரித்தான கொள்கைப்படி அந்த ஆட்டோ எஸ்கேப். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் அப்போது இல்லாததால் கையில் வலியோடு இரவுப் பணியில் ஆஜர்.

அடுத்தடுத்த நான்கு நாட்கள் அலுவலகம் போன போது, கையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலி குறையாததால் எக்ஸ் ரே எடுத்து பார்த்தால் வலது உள்ளங்கையில் விரலின் கீழ் பகுதியில் எலும்பு முறிவு. 'கண்களுக்கு நிகரானது கைகள். அதை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. மருத்துவமனையின் இந்த வாசகங்கள், அடுத்தடுத்த நாட்களில் அனுபவப்படுத்தின.




வலது உள்ளங்கையில் முழுமையாக கட்டு போட்டதோடு முறிந்த எலும்பு மீண்டும் ஒன்று சேர மூன்று வாரங்களாகும். கட்டிலும் தண்ணீர் படக் கூடாது என்ற அறிவுரை பிளஸ் மாத்திரைகளை தந்து அனுப்பினார், ஆர்த்தோ டாக்டர்.

அந்த மூன்று வாரங்கள் மிக கொடுமையானவை. வேலை இல்லாதவனின் பகல் பொழுதுகள் மிக நீளமானவை என்ற வார்த்தைகளின் பொருள் அறிந்த தருணங்கள் அவை. வீட்டில் எல்லோரும் பள்ளிக்கூடம் சென்ற பிறகு, படிக்கட்டுகளில் வழிந்தோடும் வெயிலும், அதை துரத்தி துரத்தி பிடிக்கும் பாதாம் மரத்தின் இலைகளுமே துணை. அவ்வப்போது அணிலும், பூனைகளும், பாதாம் பழத்தை ருசிக்க வரும் பசுக்களும் நலம் விசாரித்துச் செனறன.

வைரமுத்து சிறுகதைகள், வேல.ராமமூர்த்தி சிறுகதைகள், பதின் அப்புறம் தேசாந்திரி துணையெழுத்து, பொன்னியின் செல்வன் புத்தகங்களின் மறுவாசிப்பு... இப்படியாக வாரங்கள் கழிய, இதோ மற்றொரு எக்ஸ் ரேக்கு பிறகு கட்டு அவிழ்த்தாகி விட்டது.

வீட்டுச் சிறையில் இருந்து எனக்கு விடுதலை. மாவு கூண்டுக்குள் இருந்து வலது கைக்கு விடுதலை. ஒரு வழியாக மீண்டும் வழக்கமான பணிகள். விரல்களும் கைகளும் கண்களை போல எவ்வளவு முக்கியம் என்பதை இந்த விபத்தால் உணர்ந்தேன். எனது தொழிலுக்கும் அவைதான் மூலதனம்.

சாலைப் பயணம் செல்லும் முன் எனது அனுபவத்தை ஒரு படிப்பினையாக்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே. பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் மிகக் கவனமாகவே செல்லுங்கள். நமக்கோ, நம்மாலோ ஆபத்து நேரிடாமல் கவனம் காப்போம்.

சிறிய சாலை விபத்துகள் கூட, பெரிய அளவில் உடல், மன வருத்தங்களை தரும், நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும். விரலின் வீரியத்தால் விளைந்த  முன்று வார வேதனை கூறுகிறது, 

"போக்குவரத்து விதிகள் என்பது சட்டமல்ல. வாழ்வியல் வழிமுறைகளின் அங்கம்".

#நெல்லை_ரவீந்திரன்