Sunday 13 June 2010

யார் கவுரவர்?

யார் கவுரவர்?
யார் பாண்டவர்?
விடை அளிப்பதற்கு
இது கடினமான கேள்வி.

தர்மத்தின் ஆட்சி
போய் விட்டது!
சூதாட்டம் பெருகி விட்டது

பாஞ்சாலி -ஒவ்வொரு
பஞ்சாயத்திலும்
அவமானப் படுகிறாள்

மகாபாரத போர்
இப்போதும் நடைபெறுகிறது! - ஆனால்
கிருஷ்ண பரமாத்மா
மட்டும் இல்லை

யார் ஆட்சி நடத்தினாலும்
ஏழைகள் என்னவோ
வறுமையில் தான் உள்ளனர்

= வை.ரவீந்திரன் 

No comments: