Sunday 12 September 2010

எனது மூத்த மகன்


* உன் பார்வை
முதன் முதலில்
என் பக்கம்
திரும்பியபோது
பனி பூக்களை
தூவிய பரவசம்

* தாயின் கருவறைக்கு
விடை கொடுத்து
நீ
பூமியை தொட்டு
பார்த்த அந்த
கணப் பொழுதில்
உணர்வுகளின்
உரசலை தாண்டி
காதலின்
அர்த்தங்களை - நாங்கள்
பூரணமாக
புரிந்து கொண்டோம் 

= வை.ரவீந்திரன் 

No comments: