Monday 13 September 2010

காஷ்மீருக்கு ஒரு நீதி, ஈழத்துக்கு ஒரு நீதியா?




இந்தியாவின் தலை பகுதி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இன்று நேற்றல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக. ஆனால் கடந்த சில மாதங்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். காஷ்மீர் பற்றி தான் சொல்லுகிறேன். இந்தியாவின் பிரஸ்டீஜ் போன்று கருதப்படும் காச்மீருக்காக மத்திய அரசு கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அரசியல் சட்டத்தில் 370 வது பிரிவு காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கிறது. இதன் மூலமாக, காஷ்மீருக்குள் இந்தியாவை சேர்ந்த வேறு யாரும் கை அகல நிலம் கூட வாங்க முடியாது. இது மட்டும் அல்ல. தேவையான அளவுக்கு தாரளமாக மத்திய அரசின் நிதி வேறு வாரி வழங்க படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போதைய மன்மோகன் சிங் அரசு சில லூசுத்தனமான முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறது.
அதாவது, கலவர பூமியான காஸ்மீரில் இருக்கும் ராணுவத்துக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்கள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சில மாவட்டங்களில் ரத்தும் செய்யப்பட்டு விட்டது. இது தவிர, காஸ்மீருக்கு சுயாட்சி அளிக்கவும் பரிசீலனை நடைபெறுகிறது. இது போன்ற கோரிக்கைகளை எல்லாம் முன் வைப்பவர் யார் தெரியுமா? காஸ்மீரில் ஆட்சி செய்யும் அனுபவமே இல்லாத சின்ன பயன் முதல்-மந்திரி உமர் அப்துல்லா.
தமிழ் நாட்டை போலவே, தந்தை-மகன்-பேரன் என்று காஸ்மீரிலும் தொடருகிறது, பரம்பரை அரசியல்.
ந்த சின்ன பயன் கோரிக்கையை மன்மோகன் சிங்கும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். என்ன வெட்கக் கேடு. அதற்கு ஆமாம் சாமி போடுவது, நம்ம ஊரு சீமான் வீட்டு செல்ல பிள்ளை (உபயம் கருணாநிதி) ப. சிதம்பரம். ராணுவ மந்திரி அந்தோணி, நிதி மந்திரி பிரணாப் ஆகியோர் எதிர்த்தும் இத்தகைய கேடுகெட்ட முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
இந்த இடத்தில, காஸ்மீரில் உள்ள பிரிவினை தலைவர்கள் குறிக்கோள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். 'நம்முடைய போராட்டங்கள் எந்த வடிவில் இருந்தாலும் சரி. நேரத்துக்கு ஏற்ப போராட்டங்கள் மாறலாம். அனால். நமது குறிக்கோள் ஒன்றே. சுதந்திர காஸ்மீர் மட்டுமே நமது லட்சியம்' - என்பது பிரிவின தலைவர்களின் முழக்கம். தற்போதைய போராட்டம், கல் வீச்சு.
தன்னுடைய கொடிய நோய்க்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்து விட்டு காஷ்மீர் சென்றதும் நடந்த வரவேற்பு கூட்டத்தில் பேசிய கிலானி என்ற பிரிவினைவாத தலைவர், 'காஸ்மீரை சட்ட விரோதமாக இந்திய ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. எனவே, இந்திய மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என முழக்கமிட்டார்.இது போன்ற கொள்கை பிடிப்பு கொண்ட தலைவர்களின் உறுதி மொழியை ஏற்று இரண்டு நாட்களுக்கு முன்னால் ரம்ஜான் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்தார், சின்ன பையன் உமர். இதுதான் சமயம் என்று, ஆயிரக்கணக்கான பிரிவினைவாத இளைஞர்கள் ஒன்று திரண்டு வன்முறை-இல் இறங்கி விட்டனர். அரசின் ஆசிர்வாதத்தோடு பிரிவினைவாதிகள் ஒன்று கூடி விட்டனர்.
இது போன்ற முன் யோசனை இல்லாத முட்டாள் தனமான முதல் மந்திரி மற்றும் பொறுப்பற்ற பிரதமரை எங்கேயாவது பார்க்க முடியுமா? இந்த கும்பல் காஸ்மீர் பிரச்சினையை தீர்க்க போகிறதாம்?
சரி, காஸ்மீர் பிரச்சினை எக்கேடு கேட்டும் போகட்டும். அது பற்றி விளக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தகவல்களும். இப்போ விசயத்துக்கு வருவோம்.
இப்போது காஷ்மீர் போராட்டத்தை தனி ஈழ போராட்டமாகவும், இந்தியாவை இலங்கையாகவும் ஒப்பிட்டு பார்க்கலாம். இதை மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசே ஒப்பிட்டுக் கொண்டது. இலங்கையில் கடந்த ஆண்டு யுத்தம் நடந்தபோது, 'காஸ்மீர் கலவரத்தை ஒடுக்கும் நாம், தனி ஈழத்தை எப்படி ஆதரிக்க முடியும்' என கேட்டவர்கல் தான் இந்த காங்கிரசார். மன்மோகன், சிதம்பரம் போன்றவர்கள் இப்படி தான் கூறிக் கொண்டார்கள்.
சரி.
அவர்கள் வாதப்படி வைத்துக்கொண்டால் இப்போது ராணுவத்தை முற்றிலுமாக இறக்கி காஸ்மீரில் முழு தாக்குதலை நடத்த வேண்டியது தானே? இலங்கை-இல் தமிழர்களை முற்றிலுமாக ஒழிக்க இந்திய உதவி செய்தது அல்லவா? அது போல, காஸ்மீரிலும் முழு அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா, இங்கிலாந்து இப்படி உதவிகள் கேட்கலாமே, ராஜா பக்சே போல. மேலும், பொன்சேகா போல ஒரு தளபதியை நியமித்து முழு வீச்சில் தாக்குதல் நடத்தி காஸ்மீரை சுடுகாடக்கலாம்.
அரசியல் ரீதியாக, இதற்கும் கருணாநிதி ஆதரவு தருவார். வேண்டுமானால், அந்த தாக்குதலை சர்வதேச அளவில் மூடி மறைக்க தேவையான ஆலோசனைகளும் தருவார். ராஜா பக்சே விடமும் கூடுதல் அறிவுரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதை விட்டு விட்டு, 370 வது சட்டப் பிரிவு, சுயாட்சி, ராணுவத்துக்கு அதிகாரத்தை விலக்குவது என்று சிறு பிள்ளை தனமாக செய்வது ஏன்? இலங்கை தமிழனுக்கு ஒரு நியாயம். காச்மீரிக்கு ஒரு நியாமமா? இது போன்ற தீர்வுகளை அப்போது இலங்கை அரசிடம் ஏன் கூறவில்லை. மாறாக, ஆயுதமும் ஆட்களும் அனுப்பி போரை முன் நின்று நடத்தியது ஏன்?
சண்டை முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கூட, இன்னமும் ஈழத்தில் நெருக்கடி நிலை நீடிக்கிறதே? ஆனால், காஸ்மீரில் வெட்டு குத்து நடக்கும் போதே ராணுவத்துக்கு அதிகாரத்தை குறைக்கும் யோசனை முன் வைக்கப் படுகிறதே?
இலங்கையில், தமிழர் பகுதிகளில் மீண்டும் தனி நாடு போராட்டம் எழுந்து விடக்கூடாது என்பதற்காக சிங்களர்கள் குடி அமர்த்தப்பட்டு வருகின்றனர். ராஜ பக்சே செய்யும் இந்த முடிவை ஆதரித்து, அங்கு புனரைமைப்பு பணிகளுக்கு கோடிகளை கொட்டும் இந்திய அரசு, காஸ்மீரிலும் மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்களை குடி அமர்த்தலாமே?அனால், அங்கிருந்து விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்கு கூட, ஆதரவு அளிக்கவில்லையே ஏன்? ராஜா பக்செவுக்கு இருக்கும் துணிச்சல், தெனாவட்டு மிகப் பெரிய நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவுக்கும் அதை ஆளும் மன்மோகனுக்கும் இல்லையே? தமிழன் என்று கூறிக்கொள்ளும் சிடம்பரத்துக்கும் இல்லையே?
அப்போது தனி ஈழ போராட்டத்தை கடுமையாக எதிர்த்த சிதம்பரம், இப்போது வேறு மாதிரி வேஷம் போடுவது ஏன்?கஷ்மீர் பிரச்சினை என்றால் ஒரு நீதி! ஈழம் என்றால் தமிழன் என்றால் ஒரு நீதியா?


= வை.ரவீந்திரன் 

1 comment:

karthickeyan said...

மனக்குமுறலை வெளிப்படுத்தியமை சரிதான். ஆனாலும் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுவது நல்லது.