Saturday 6 August 2011

நல்லவர்கள் எங்கே?

* முற்பிறவி பாவமே
மறு பிறவிக்கு காரணம்!
மறு ஜென்மம் பற்றிய
ஆன்மிக பெரியோர் வாக்கு இது!!

* மறுபிறவி எடுத்து
துன்பம் அடையாமல் இருக்க
நல்ல செயல்கள் செய்து
புண்ணியவானாக வேண்டும்!!!

* புண்ணியவான்களுக்கு
மறுபிறவி இல்லை என்றால்
புத்தனும் மகாத்மாவும்
மறு பிறவி எடுப்பார்களா?

* நாளுக்கு நாள்
நல்லவர்கள் குறைவதற்கு காரணம்
இப்போது தான்
எனக்கு புரிகிறது

= வை.ரவீந்திரன்

No comments: