Wednesday 31 August 2011

சந்தைக்கு வந்த சித்தாளு

மாநகரின் மையப்பகுதி
பன்னாட்டு வங்கிகள்
கணிப்பொறி அலுவலகங்கள் & என
கர்ப்பம் தரித்து நிற்கிறது
பிரமாண்ட கட்டிடம்

அதோ தெரியும்
அஞ்சாவது மாடியில் தான்
வேலை பார்த்தேன்
அறிமுகம் செய்தாள் & மகனுக்கு
சித்தாளு, பொன்னாத்தா!

இதோ ஒரு கூண்டு போல
இருக்குதல்லவா-?
இங்கே தான் & கட்டுமானம்
முடியும் வரையிலும்
தங்கியிருந்தோம்

விண்ணை முட்டி
பிரமாண்டமாக நிற்கும்
கட்டிடத்தை
அங்குலம் அங்குலமாக
அறிமுகம் செய்தாள்,

ஏய், இந்தா, தள்ளிப் போ
காவல்காரரின் அதிகாரக் குரல்
கட்டிடத்தின் வெளி வாயிலில்
இருந்து வீதிக்கு துரத்தியது
சித்தாளு பொன்னாத்தாவை

கணிப்பொறி அலுவலக
பெயர் பலகை மின்னுகிறதே?
அங்கிருந்து தானே
கீழே விழுந்து இறந்தாள்
கல் சுமந்து வந்த கண்ணம்மா

நினைவலைகளின் எச்சம்
கண்களை திரைபோட்டு
மறைக்க
திரும்பி பார்த்தபடியே
சென்றாள், பொன்னாத்தா,

= வை.ரவீந்திரன் 

No comments: