Tuesday 22 November 2011

குழந்தைகள் தினக் கவிதை

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

பேதம் பார்த்து எங்களை வெறுக்காதீர்கள்
எங்களின் எதிர்கால கனவுகளை சிதைக்காதீர்கள்
அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றாதீர்கள்
நாளைய தலைவர்களான எங்களை தடுக்காதீர்கள்& ஏனெனில்

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

அற்ப வெற்றிக்காக திறமைகளுக்கு திரையிடாதீர்கள்
உங்களின் அச்சத்தில் உண்மையை மறைக்காதீர்கள்
மகிழ்ச்சி என்னும் வாகனமாக எங்களை கருதாதீர்கள்
உங்களின் தவறுகளுக்கு எங்களை கண்டிக்காதீர்கள் & ஏனெனில்

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

நாங்கள் உங்களுடைய நம்பிக்கை; உங்களின் எதிர்காலம்
ஊழ்வினையையும் மாற்ற முடியும் எங்களால் & ஆனால்
உங்களின் உதவியின்றி எதுவும் சாத்தியமல்ல ஏனெனில்
நாங்கள் குழந்தைகள். கடவுளின் அன்பு பரிசு

= வை.ரவீந்திரன் 

No comments: