கண்ணிலோ நித்திரை
உங்களுடைய தாலாட்டில்
பதித்ததோ முத்திரை
தந்தையின் வழிகாட்டுதலில்
சந்தைக்கு பயணம்
உங்களுடைய வழிகாட்டுதலில்
வாழ்க்கைப் பயணம்
நண்பனின் அரவணைப்பில்
கண்டதோ சகோதரத்துவம்
உங்களுடைய அரவணைப்பில்
வென்றதோ முதலிடம்
கல்லும் கலையாமல்
சிலையும் சிதறாமல்
சிற்பமாய் செதுக்கினீர்
எம்மை
கை குவித்து வணங்குகிறேன்
மாதா பிதா குரு என
ஓருருவாய் திகளும்
உம்மை.
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment