Sunday 30 March 2014

புதுவையின் பழமை - நூல்


‘புதுவையின் பழமை என்ற புத்தகம் 
புதுச்சேரி பற்றிய நல்ல தொகுப்பு
மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்
எளிய நடையில் தகவல்களை கூறுகிறது’


திறனாய்வு விழாவில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.


உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மல்லிகை மணம் அலாதியானது அதுபோல உருவத்தில் சுருங்கி கிடந்தாலும் புதுச்சேரியின் பிரெஞ்சு மணம் தனித்துவம் நிறைந்தது.

சிறப்பு வாய்ந்த புதுவை மாநிலத்தின் அரசு சின்னமான ஆயி மண்டபத்தின் பின்னணி என்ன  ஆயி என்பது யார் அந்த மண்டபத்துக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் உள்ள தொடர்பு என்ன?

 புதுவையில் உள்ள ஆயிரம் ஆண்டு அதிசயம் புதுவையின் அடையாளமான மணக்குள விநாயகரின் அதிசயிக்க வைக்கும் கதை

புதுச்சேரி தேவாலயங்களின் பிரெஞ்சு பின்னணி அவற்றை கட்டி எழுப்பியவர்கள் யார் யார்

இந்தியாவை பிரெஞ்சு சாம்ராஜ்யமாக மாற்ற நினைத்து புயலாக புறப்பட்ட டூப்ளக்ஸ் புதுவைக்குள் மடங்கி போன கதை

அவரால் கட்டப்பட்ட கவர்னர் மாளிகையின் நூற்றாண்டுகளை கடந்த வரலாறு

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை போலவே புதுவையில் பிரெஞ்சியர் கட்டிய கோட்டை

கடலுக்குள் ஒரு கி மீ வரை அமைத்த ரயில்பாதை

நூற்றாண்டுகளை கடந்த புதுச்சேரி பள்ளிகள் அவற்றை தொடங்கியாவர்கள் வரலாறுடன்

பதுச்சேரி கல்லறை தோட்டங்களுக்கு கூட நீண்ட பழம் பெருமை உண்டு
காரைக்கால் மாகி யேனம் என பிரிந்து கிடக்கும் மாநிலத்தின ரகசியம்

இதுபோன்ற பல்வேறு அரிய தகவல் களஞ்சியம்

கிடைத்தற்கு அரிதான படங்களுடன் எளிமை நடையில் புதுவை வரலாறு
 புதுவையின் பழமை

எனது எழுத்தில் உருவான புத்தம் புதிய புத்தகம்

சூரியன் பதிப்பகம் வெளியீடு











No comments: