Tuesday 17 February 2015

காதலி விடு தூது

கண்ணுள்ளே இருக்கிறாய் நீ
சிறிய உரு கொண்டு - ஆதலின்
இமைப்பதை மறந்தேன்...!

தீட்டினால் துன்புறுவாய் என
மையிடலை துறந்தேன்...!
நெஞ்சுள்ளே உன் நினைவு
நிறைந்து கிடப்பதால்
சூடான உணவு உண்ணேன்...!
 

அயலரறியா என் காமம்
தெருவெல்லாம் திரிகிறது
மயக்கம் கொண்டு...!
நான் பட்ட பாட்டை
தான் படாத பேதையர்
என் நிலை கண்டு நகைப்பா்...!
 

ஆயினும்
வள்ளுவன் வெட்டிய
இன்பப்பால் கடல் நோக்கி
தூது விடுகிறேன்
என் உயிர் காதலை...


= வை.ரவீந்திரன் 

No comments: