குறுநகை புரிகிறாள் எழுத்து காதலி...
மழைக்கால ஈசல் போல
சுற்றி சுழலுகின்றன எழுத்துகள்
ரீங்காரமிடும் ஓசையில்
ஒவ்வொன்றாய் பிடித்துப் போடுகிறேன்
நெல்லிக்கனி எண்ணும் சிறுவனாய்
சிறு சிறு சரமாக கோர்க்கிறேன்
மாலை தொடுக்க முயற்சிக்கிறேன்
எழுத்து மலர்கள் சிதறுகின்றன
ஒன்றும் வகைப்படவில்லை
ஒழுங்கற்று சிதறுகின்றன
மணல் சிற்பமாய் சிதறுகிறது
அடுக்கி கோர்த்த எழுத்தோவியம்
கவிஞனா, எழுத்தாளனா
தகவல் கூறும் கட்டியக்காரனா
குழம்பும் மனம் பார்த்து
கேலி கும்மியடிக்கின்றன
தன்னை உதிர்த்துக் கொண்ட எழுத்துகள்
கவிப்பாதையில் செல்லும்
எழுத்து கோர்ப்பவனை பார்த்து
பரிகசிக்கும் எழுத்துகள்
அதை பார்த்து தவிக்கும்
தகவல் கட்டியக்காரனின்
கனவில் குறுநகை புரிகிறாள்
என்னுடைய எழுத்து காதலி...
No comments:
Post a Comment