Wednesday 20 December 2017

துயிலெழுப்பும் அதிகாலை...

துயிலெழுப்பும் அதிகாலை


இதழெனும் போர்வை மூடி
இதமூட்டும் நறுமண மலரின்
மகரந்த மெத்தையில்
மயங்கி கிடக்கும் வண்டினத்தை
பறவைகள் பூபாளம் இசைக்க
பனித் துளிகள் பன்னீர் தெளித்து
துயிலெழுப்பும் 
அதிகாலைப் பொழுது...


= நெல்லை ரவீந்திரன்


No comments: