Tuesday 12 July 2011

மழையின் பரிமாணங்கள்

மழைத்துளி விழுந்து மண்ணின்
மணம் எழுந்ததால் எழுதினேன்!
ஜலதோஷம் பிடிக்கிறது என்றாலும்
குழந்தைக்கு நனைவதே பிடிக்கிறது

கூரையில் இருந்து வழியும்
மழையில் நனைந்த சுகம்
அடுக்கு மாடி கட்டிடத்தின்
சன்னல்களில் இல்லை

ஒவ்வொரு முதல் மழையிலும்
பாட்டியின் குரல் ஒலிக்கிறது
முதல் மழையில் நனையாதே
உடலுக்கு சுகவீனம் வரும்

இது மழைத்துளி அல்ல
சோர்வு வடுக்களை துடைத்தெறிய
மேகப்பஞ்சு நெய்து அனுப்பிய
மழைத் துணி!

= வை.ரவீந்திரன் 

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் வாழ்த்துக்கள்
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

நன்றி

நெல்லை ரவீந்திரன் said...

அன்பு நண்பரே, பாராட்டுகளுக்கு மிக்க நன்றி,