வளமாக்கும் சிக்கனம்
வரலாறுகளில்
தகராறுகள் உருவாவது
சொல் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்
குடும்பங்களில்
மன பேதங்கள் உருவாவது
பொருள் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்
வயல்கள் எல்லாம்
மனைகளாக உருவாவது
நீர் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்
சிதையாத சிக்கனம்
வாழ்வை வளமாக்கும்
இலக்கணம்
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment