Tuesday 6 January 2015

வளமாக்கும் சிக்கனம்

வரலாறுகளில்
தகராறுகள் உருவாவது
சொல் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

குடும்பங்களில்
மன பேதங்கள் உருவாவது
பொருள் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

வயல்கள் எல்லாம்
மனைகளாக உருவாவது
நீர் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

சிதையாத சிக்கனம்
வாழ்வை வளமாக்கும்
இலக்கணம்

= வை.ரவீந்திரன்  



No comments: