Monday 20 April 2015

ரகசிய பெட்டகங்கள்



 
 நீங்காத நறுமணங்கள்
நிறைந்த நந்தவனம்
இந்த உலகம்
ஓட்டை பானையில்
ஒழுகும் நீர் போன்ற
ஆயுள் கொண்ட மனிதன்
பாதம் பதிந்த பகுதிகளில் மட்டும்
பெயர்களின் வாசம்


காலம் நம் கரம் பற்றி
இழுத்து செல்லும் வழியில்
கரடு முரடான மலைகளும்
வளைந்த முகடுகளும்
வருத்தங்களை தரலாம்
வருத்தம் நீங்கி தடைகளை கடந்தால்
குளிர்தரும் நீரோடைகளும்
நறுமண சோலைகளும் வரவேற்கலாம்


ரகசியங்களின் குவியல்
ஆழ்கடலுக்கு மட்டுமேயானதல்ல
உயிர்தாங்கி உலவும்
உடல்கள் ஒவ்வொன்றும்
உடல்களை தாங்கும்
பூமியின் ஒவ்வொரு அங்குலமும்
சாவி இல்லா ரகசிய பெட்டகங்களே


= வை.ரவீந்திரன் 

No comments: