Sunday 21 August 2016

நவீன மனு நீதி

ஆராய்ச்சி மணி ஒலிக்க
யாரங்கே என விளித்தான்
நவீன மனு நீதி
சேதியுடன் வந்தனர்
சேனையின் வீரர்கள்
கண்ணீருடன் நிற்கிறது
அபலை பசு ஒன்று
இளவரசர் தேரில் சிக்கி
சிதைந்து போனதாம்,
அந்த பசுவின் கன்று...
யோசித்தான் மனு நீதி,
பின்னர், அழைத்தான்...
லகுட பாண்டிகளுள்
ஒரு அப்பாவி
லகுட பாண்டியை
பசுங் கன்றின்
உயிர் கொலைக்கு
காலையில் விசாரணை
தப்பாமல் ஆஜராகுமாறு
ஆணையிட்டான்
வீட்டுக்கு மானியம்
குழந்தைகளுக்கு சொத்து
மனைவிக்கு அரண்மனை பணி
அடுக்கடுக்காக வழங்கினான்
நவீன மனு நீதி
விசாரணை மண்டபம்...
தேருக்கு முன் சென்றது
பசுவின் குற்றமாக கருதி ...
தேரோட்டிக்கு விதித்தனர்
ஆயுள் தண்டனை
புகார் இந்திர விழாவில்
கருணையின் பேரில்
தேரோட்டியை விடுவிக்கலாம்
மனு நீதியும், மகனும்
மனதினுள் யோசித்தனர்
நீதியை யாசித்த பசுவின்
கண்ணீர் உறைந்தது
பசுவும் கல்லாய் சமைந்தது
நவீன மனு நீதி சோழன்
மகிழ்கிறான், மகனுடன்...

No comments: