வார்த்தைகள் இல்லா
வர்ணமற்ற பொழுதொன்றில்
புருவத்தை சற்றே உயர்த்தி
கறுப்பு வெள்ளை விழிகளால்
வினா எழுப்பி நின்றாய்...
கண்களாலேயே
அபிநயம் பிடித்தபடி
புருவத்தை மட்டும்
சில கணம் நெளித்து
கண்ணின் மணிகளை
சுழற்றியபடி நீ எழுதிய
எழுத்தில்லா சொற்காவியங்கள்
காற்றில் நீந்தி வந்து
என்னை சேர்ந்த சமயத்தில்
கற்றுக் கொள்ள தொடங்கினேன்
தேவதை விழி மொழியை...
வர்ணமற்ற பொழுதொன்றில்
புருவத்தை சற்றே உயர்த்தி
கறுப்பு வெள்ளை விழிகளால்
வினா எழுப்பி நின்றாய்...
கண்களாலேயே
அபிநயம் பிடித்தபடி
புருவத்தை மட்டும்
சில கணம் நெளித்து
கண்ணின் மணிகளை
சுழற்றியபடி நீ எழுதிய
எழுத்தில்லா சொற்காவியங்கள்
காற்றில் நீந்தி வந்து
என்னை சேர்ந்த சமயத்தில்
கற்றுக் கொள்ள தொடங்கினேன்
தேவதை விழி மொழியை...
No comments:
Post a Comment