Saturday 10 December 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 22

இந்த கொண்டாட்ட பூமியில், எனது 5 ஆண்டுகளும் பெரும்பாலும் கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களாகவே நிறைந்திருந்தன. தினகரன் செய்தியாசிரியராக சென்ற சில மாதங்களிலேயே புதுச்சேரியின் பழைய புகைப்படங்கள் சிலவற்றை நண்பர் குரூஸ் தனம் தந்தார். அதுதான், புதுச்சேரி பற்றிய எனது ஆர்வத்துக்கான கருவாக அமைந்தது.



பின்னர், தினகரன் நாளிதழில் அந்த புகைப்படங்களுடன் கூடிய எனது கட்டுரைத் தொடர் வெளிவரத் தொடங்கியது. அந்த தொடர் மூலம் எனக்கு கிடைத்த நட்புகள் ஏராளம். புதுச்சேரி தமிழ் சங்கத் தலைவர் முனைவர் முத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரராகவன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி பிரதீஷ், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் தனி செயலாளர் ஜெகஜோதி, அமைச்சர் ராஜவேலுவின் தனிச் செயலாளர் முருகன் என அரசியல் ரீதியான நட்புகள் தொடங்கி, பேராசிரியரும் குறும்பட இயக்குநருமான மு.இளங்கோவன், நூலக அதிகாரி சம்பந்தம், புஸ்தக் மந்திர் சம்பத் என பலருடைய ஆதரவும் கிடைத்தது. செய்தித் துறையில் எழுத்தாளர் கணபதி (மகரந்தன்), தனசேகர் ஆகியோரையும் மறக்க முடியாது.



இது ஒருபுறம் இருக்க மூத்த பத்திரிகையாளர் உதய நாராயணன், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பி.என்.எஸ். பாண்டியன், பத்திரிகையாளர்கள் தயாளன், இளவமுதன், பழனிசாமி, பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநருமான குணவதி மைந்தன், புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர் கலாபன் தொடங்கி, எங்கள் தினகரனின் சக நண்பர்கள் வரை அனைவரின் ஆதரவையும் மறக்க முடியாது.



மூன்றாண்டு தினகரன் பணியின்போதும், இரண்டாண்டு தி இந்து பணியின்போதும் விழாக்களை மறக்க முடியாது. எழுத்தாளர்கள் கி.ரா., எஸ்.ரா, இமையம், ஜோடி குரூஸ், இந்திரன் ஆகியோர் பங்கேற்ற மேடைகளில் சிறிய இடம். தினகரன் மற்றும் தி இந்து விழா மேடைகளில் இடம் என புதுச்சேரியில் எனது 5 ஆண்டு அனுபவமும், அது ஒரு விழாக்காலம்.


(அனுபவம் இனிக்கும்)

No comments: