Monday 17 November 2014

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். 

இந்த பழமொழி அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பத்து என்ன என்று தெரியுமா?
.
.
.
.
.
1) தன்மான உணர்வு,
2) குடும்ப கவுரவம்,
3) கல்வி,
4) அழகு,
5) அறிவு,
6) இரக்க குணம்,
7) அற சிந்தனை,
8) உயர்ந்த பெருமை,
9) விடா முயற்சி அல்லது ஊக்கம்,
10) பெண் ஆசை அல்லது காம உணர்வு.


இதை நான் சொல்லலீங்க...
தமிழ் மூதாட்டி அவ்வையார் சொல்லி வச்சிருக்காங்க... அவர் எழுதிய பாடல் இதோ.....
.
.
.
.
.
மானம்குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போம். 


-  நல்வழி பாடல்

No comments: