Friday 7 November 2014

சிந்தனைக்கு....



”இந்தியா நாடு முழுவதும் வடக்கு, தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் முழுமையான சுற்றுப்பயணம் செய்தேன். ஒரு பிச்சைக்காரனையோ அல்லது ஒரு திருடனையோ என்னால் காண முடியவில்லை. அந்த நாட்டின் உயர்ந்தபட்ச நீதி நெறிமுறைகள் போன்ற சொத்தை எங்கும் நான் கண்டதில்லை. மிகச் சிறந்த கலாச்சாரம், பாரம்பரிய ஒழுக்கம், ஆன்மிகம் என இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் சிலவற்றை நாம் உடைக்காதவரை அந்த நாட்டை நாம் நிரந்தரமாக ஆளுவது முடியாத காரியம் என நான் கருதுகிறேன்.

அதனால், அந்த நாட்டின் மிகப் பழமையான கல்வி முறை மற்றும் கலாச்சாரத்தை மாற்றும் வகையிலான ஒரு திட்டத்தை இங்கு முன் மொழிகிறேன். தங்களுடைய சொந்த கல்வி முறை மற்றும் கலாச்சாரம், பாரம்பரிய ஒழுக்கம் ஆகியவற்றை விட மேலைநாட்டு ஆங்கிலேய கல்வி முறையே சிறந்தது என இந்தியர் ஒவ்வொருவரும் கருதத் தொடங்கினால் அவர்களுடைய சுயத்தையும் இயற்கையான கலாச்சார பண்பாடு போன்றவற்றை இழப்பார்கள். எவ்வாறு அவர்கள் மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு தகுந்தவாறு அவர்கள் மாறுவார்கள். தொடர்ச்சியாக அவர்களை நம்மால் எளிதாக மேலாதிக்கம் செய்ய முடியும்”

= இது, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே பிரபு ஆற்றிய உரை.

(பி.கு: இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை அறிமுகம் செய்தவர் தான், இந்த மெக்காலே. இந்திய கல்வி முறைக்கு மெக்காலே கல்வி திட்டம் என்ற பெயரும் உண்டு)

No comments: