Tuesday 25 November 2014

அமைதி நோக்கி பயணம்

ஆள் அரவமற்ற வெட்ட வெளி
அதிகாலை பனித் துளிகளை
தாங்கி நிற்கும் தாவரங்கள்
வேகமாக நடந்தால் கூட
தூரம் குறுகியதாக தெரியவில்லை
சமவெளியை கடந்தால்
ஆழமான பள்ளத்தாக்கும்
கூடவே அதி பயங்கர நீர் வீழ்ச்சியும்
நிச்சயமாக ஏற்ற இடம் தான்

இன்னும் கொஞ்சம் நடையை
எட்டிப் போட்டால் அடைந்து விடலாம்
மனது எண்ணியதை கால் செயல்படுத்தியது

அடையாளங்களை தொலைத்து
சாதாரண மனிதனாக வாழ தீர்மானித்து
தொடங்கிய பயணம் இது
அனைத்தையும் உதறி விட்டு
கால்கள் பரபரத்து ஓடின
சற்று தொலைவில் இருக்கும்
அடையாளம் ஏதுமற்ற அமைதி நோக்கி.... 


= வை.ரவீந்திரன்

No comments: