Tuesday 4 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி… 1

இங்கிலாந்தில் ஐ.சி.எஸ். பட்டம் பெற்று இந்தியா திரும்பி, ஆங்கிலேயருக்கு எதிராக வெடிகுண்டு போராட்டம் நடத்திய அரவிந்த் கோஷ் என்ற இளைஞரை பண்படுத்தி ஆன்மிக நாட்டத்தில் திருப்பியது, புதுச்சேரி மண். மறைவுக்கு பிறகும் ஸ்ரீ அரவிந்தர் என இந்த உலகத்தை திரும்பி பார்க்கச் செய்ததும் புதுச்சேரியே.



கொலை பாதகம் அறியாதவராக வளர்ந்த வாஞ்சிநாதனை, மணம் முடிந்து சில வாரங்களேயான அந்த இளைஞரை, சுதந்திர கனல் ஊட்டி, நெல்லை மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை கொல்லும் அளவுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததும் புதுச்சேரியே….

எழுத்து வெடிகுண்டு வீசியதால் ஆங்கிலேயரின் கோபத்துக்கு ஆளாகி, தன்னை நாடி வந்த சுப்பிரமணியை, மகாகவி பாரதியாக்கி அழகு பார்த்ததும் புதுச்சேரி மண் தான். தன்னுள் வந்த ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அனுபவத்தை அளித்த புதுச்சேரி மண்ணில் எனக்கும் ஓர் ஐந்தாண்டு அனுபவம்…



அதன் ஈராயிரம் ஆண்டு பழமையை பற்றி ஒரு புத்தகம் எழுதியது…, பத்திரிகை பணியில் உயர்ந்த ஒரு இடம்…, சித்தர்களின் பூமியான புதுவையில், எனது தந்தையின் இறுதி மூச்சு அடங்கியது…., என மறக்க முடியா பல்வேறு அனுபவங்கள் நிறைந்தது, அந்த ஐந்தாண்டுகள்…

பல நூற்றாண்டு பழமை பற்றிய ஆய்வின்போது அகக்கண்ணால் நான் பார்த்த புதுச்சேரி, நிகழ் காலத்தில் புறக்கண்ணால் நான் கண்ட புதுச்சேரி… இரண்டுமே கண்ணில் நிழலாடுகிறது. அதை சுருக்கமாக பதிவு செய்வதில் மகிழ்கிறேன். அது, ஒரு குடியரசு நன்னாள்… அந்த நாளில் தான் முதன் முதலாக அந்த மண்ணில் அடியெடுத்து வைக்கும் பாக்கியம் எனக்கு வாய்த்தது….

(அனுபவம் இனிக்கும்…)

No comments: