Monday 10 October 2016

தேவகுமாரன் வருவான்...?

ஆயிரம் ஏக்கருக்குள்
லட்சம் மக்களை
அடைத்தபோது கூட
நம்பிக்கை கண்ணி அறுபடவில்லை
நண்பர்களென நம்பியோர்
கட்டியணைத்து முதுகில்
கத்தி செருகியபோது
கண்ணியில் தொய்வு நேரிட்டது
எல்லாம் முடிந்ததென
எக்காள குரல் எழும்பியபோது
நந்திக் கடலின் சிவப்பினுள்
கண்ணியின் ஒரு இழை அறுந்தது
முள்ளி வாய்க்காலில்
முற்றுப்புள்ளியிட்ட தருணத்தில்
கண்ணியின் மற்றொரு
இழை தொடர்பும் அறுந்தது
சர்வதேசம் பார்த்து
நம்பிக்கை கண்ணிகளின்
மிச்ச இணைப்புகள்
எதிர் நோக்கி காத்திருந்தன
பேயின் சதிராட்டத்துக்கு
பிசாசு, குட்டிச்சாத்தான்களிடம்
நீதி, நியாயம் கேட்டு
நம்பிக்கை கொள்ளலாமா?
ஆனாலும், தனித்தனியாக அறுந்து விட்ட
நம்பிக்கை கண்ணிகள்
ஒவ்வொன்றும் நம்புகின்றன
இன்னும் ஒரு தேவகுமாரன்
நீதி வழங்க வருவானென.

No comments: