Wednesday 10 December 2014

கூத்து முடிந்த கொட்டகை


நதிக் கரையோர நாணல்கள்
நெட்டி முறித்துக் கொள்கின்றன
வௌ்ளம் வடிந்து விட்டாலும்

செவ்வரி பூசிய தண்ணீர்
நீர்ச் சூழலின் மிச்சம் கூறிச் செல்கிறது


கழனிகள் தத்தளிக்கின்றன
நெடுவயல்களில் நதியின்
கால் தடம் பதிந்து கிடக்கிறது
ஏக்கருக்கு எவ்வளவு நிவாரணம்
கோரிக்கைகளும் அறிக்கைகளும்
 

அச்சில் ஏற பரபரத்து கிடக்கின்றன
வாய்க்கால் தூர்வாருவதில்
லாவணி கச்சேரி கூச்சல்
மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்தது
கூத்து முடிந்து கலைத்த
கீற்றுக் கொட்டகையாய் விளை நிலம்


= வை.ரவீந்திரன் 

No comments: