Tuesday 9 December 2014

வார்த்தைகளற்ற கவிதை....

கவிதை சொல் என்றாய்
நீயே கவிதை தானே என்றேன்
உன்னை ஓவியம்
வரையட்டுமா என கேட்டபோது
ஓவியமும் வரைவாயா..? என
விழி விரித்து வியந்தாய்
 

உன் பெயரை எழுதினாலே
ஒரு ஒவியம் தானே என்றேன்
எந்நேரமும் பொய் என
பொய் கோபம் கொண்டாய்


அப்படியே இரு
அழகான ஒரு ஓவியக் கவிதை
தீட்டுகிறேன் என கூறியபடி
உன் முகம் பார்த்தேன்

செல்ல சிணுங்கலுடன் என்
தலையில் தட்டி விட்டு
குதித்தோடிச் சென்றாய்
உன்னைத் தொடர்ந்து
வார்த்தைகளும் ஓடோடிச் சென்றன
எப்படி நான் கவிதை எழுதுவது...?

= வை.ரவீந்திரன் 

No comments: