Saturday 13 December 2014

இறைவன் தோட்டத்தின் பாத்திகள்

இறைவன் படைத்த  பூமி தோட்டத்தில்
மனிதர்கள் கட்டி வைக்கும்
பாத்திகள் எதுவும் எப்போதும்
நிரந்தரமாக இருப்பதில்லை

தூது சென்ற புறாக்கள்
மறைந்து விட்டன
தபால்காரனும் தந்தியும்
தேவையற்று போய் விட்டன

போகாமல் கெட்டது உறவு
என்ற வசனம் பொய்த்து போனது
நேரில் பார்க்காமலேயே
இணைய வழியில்
நட்பு சிறகு விரித்து
உறவு பாலம் பிணைக்க
இ மெயிலும் முக நூலும்
வாட்ஸ் அப்பும் வந்து விட்டன

= வை.ரவீந்திரன் 



No comments: