Tuesday 23 December 2014

ஊதா நிற நூல்

புத்தகக் கண்காட்சி
கடைகள் தோறும்
கேள்வி கணைகளால்
துளைத்தெடுத்தாய்
எந்த நூல் பிடிக்கும் என்று
பதிலெதும் கூறாமல்
மவுனமாக இருந்தேன்


உனக்கு தெரியுமா
முந்தைய சந்திப்பில்
உனது தாவணியில் இருந்து
உனக்கு தெரியாமல்
உருவி எடுத்த ஊதா நிற
நூல் மட்டுமே பிடிக்கும் என்று

= வை.ரவீந்திரன் 

No comments: