புத்தகக் கண்காட்சி
கடைகள் தோறும்
கேள்வி கணைகளால்
துளைத்தெடுத்தாய்
எந்த நூல் பிடிக்கும் என்று
பதிலெதும் கூறாமல்
மவுனமாக இருந்தேன்
உனக்கு தெரியுமா
முந்தைய சந்திப்பில்
உனது தாவணியில் இருந்து
உனக்கு தெரியாமல்
உருவி எடுத்த ஊதா நிற
நூல் மட்டுமே பிடிக்கும் என்று
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment