Wednesday 24 December 2014

மடைமை ஒழித்த வெண்தாடியார்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேச அறியார்
அறியாதோர் புத்தியில்
அறையும்படி கூறும் புலியார்

மூட பழக்கத்தின்
மாயையை சிறிதும் தெரியார்
பாரதிக்கு பின் மாதர் தம்
குரலாய் ஒலித்த ஒலியார்

திக்கற்ற தமிழருக்கு ஒளியாய்
திகழும் பேரொளியார்
சிறியோரையும் மரியாதையுடன்
விளிக்கும் பெரியார்

வாழ்க்கை நெறியை
வகுத்து தந்த எளியார்
மடைமையை ஒழித்து
தூய்மை படுத்திய வெண்தாடியார்

= வை.ரவீந்திரன்

No comments: