Thursday 11 December 2014

ஆதாம் ஆப்பிளின் மிச்சம்

முன் பின் அறியாத
இவனின் கரம் பிடித்து
இவரே இனி என
இவனின் வாழ்க்கை ஓட்டத்தில்
இரண்டற கலந்து
மகிழ்ச்சியில் மகிழ்ந்து
துக்கத்தில் துயர் துடைத்து
ஏமாற்ற தருணத்தில்
தட தடக்கும் ரயிலை தாங்கும்
தண்டவாளமாய் நின்று
இல்லறத்தை நல்லறமாக்கி
இல்லத்தை மலர்வனமாக்கும்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஆதாம் கடித்த ஆப்பிளில்
மிஞ்சிய காதல் சாறும்
வாசுகி வள்ளுவன் வகுத்த
அன்புடைமையும் ஊறி கிடக்கிறது


= வை.ரவீந்திரன் 

No comments: