Sunday 16 August 2020

வாஜ்பாய்... பத்து..

 1) ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாமை, மக்களின் ஜனாதிபதியாக இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

2) கலாமுடன் இவர் இணைந்து நடத்திய ஆட்சியே சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த பொற்காலம். இந்தியாவை நான்கு கரங்களாக இணைக்கும் தங்க நாற்கர சாலை திட்டம் சிறு உதாரணம். 

3) ‘பஞ்ச ஜைன்யா’, ‘வீர் அர்ஜீன்’, ‘ராஷ்டிர தர்மா’ பத்திரிகைகளின் ஆசிரியர். சிறந்த கவிஞர். அருமையான பேச்சாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், போராட்ட குணம் உடையவர்.

4) 1957 முதல் 10 முறை மக்களவைக்கும், 2 முறை மாநிலங்களவைக்கும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்த்து ‘எதிர் காலத்தில் மிகப்பெரிய தலைவராவார்’ என்ற நேருவின் கணிப்பு 40 ஆண்டுகள் கழித்து நிஜமானது. 

5) 1980ம் ஆண்டில் வெறும் 2 எம்பிக்களை மட்டுமே கொண்டிருந்த தனது கட்சியை அடுத்த 16 ஆண்டுகளில் ஆட்சிக் கட்டிலில் ஏறும் அளவுக்கு வளர்த்ததில் பெரும்பங்கு ஆற்றியவர். 

6) சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசை 5 ஆண்டு முழுமையான பதவிக் காலத்துக்கு திறம்பட நடத்தியவர். தொடர்ந்து 7 ஆண்டுகளாக பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத பிரதமர். 

7) கார்கில் போரில் பாகிஸ்தானுடன் வீரம் காட்டியதோடு, பேருந்து பயணத்தை தொடங்கி வைத்து அன்பு பூக்களையும் மலர வைத்து உலகை வியக்கச் செய்தவர். 

 8) பொக்ரானில் அணுகுண்டு வெடித்து உலகை அதிரச் செய்ததோடு, அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை எதிர் கொண்டு இந்தியாவை வழி நடத்திய தேசிய தலைவர். வல்லரசு பாதையமைத்த தலைவர்.

9) 60 ஆண்டுகளாக வலதுசாரி கொள்கைகளின் தீவிர பற்றாளராக இருந்தபோதிலும், இடது சாரி உள்ளிட்ட மாற்றுக் கொள்கை உடைய தலைவர்களின் கருத்துகளையும் கேட்ட பண்பாளர்.

10) அன்னிய நாடுகளின் நிர்பந்தங்களை, அசையா உறுதியுடன் எதிர்த்து நின்றது, உமது ஆட்சி. ஏழாண்டு

ஆட்சியில் எழுந்தது பாரதம்

ஏழு ஜென்மத்துக்கும்

மறக்குமோ பாரதம் அதை..



No comments: